Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி சார்பில்  முதல்வர் கோப்பைக் கான கிரிக்கெட் போட்டி மதுரா செந்தில் துவக்கி வைத்தார்

ஏப்ரல் 13, 2023 04:58

திருச்செங்கோடு,  நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்த நாளை ஒட்டி முதல்வர் கோப்பைக் கான கிரிக்கெட் போட்டி தொடக்கியது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் போட்டிகளை துவக்கி வைத்தார்.

 
தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70 ஆவது பிறந்தநாளை ஒட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி சார்பில் தமிழக முதல்வர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் எட்டிமடையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது போட்டிகளை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணனமுருகன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் நடேசன், மாவட்டத் துணைச் செயலாளர் மயில்சாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ்பாபு, நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் கௌதம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ஆதவன் வெங்கடேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் செங்கோட்டுவேல் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் நகர திமுக நிர்வாகிகள் ஆகியோர்  பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.


20 ஓவர்கள் கொண்ட போட்டிகள் லீக் முறையில் பத்து நாட்கள் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளதாகவும் இதில் திருநெல்வேலி, ஈரோடு, நாமக்கல், சேலம், பழனி, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 24 அணிகள் கலந்து கொண்டு விளையாட இருக்கின்றனர் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 44 ஆயிரத்து 444 ரூபாயும் இரண்டாம் பரிசாக 33 ஆயிரத்து 333 ரூபாயும் மூன்றாம் பரிசாக 22 222 ரூபாயும் நான்காம் பரிசாக 11,111 ரூபாயும் வெற்றிக் கோப்பைகளும் பரிசாக வழங்கப்படும் மேலும் ஆட்டநாயகன் வருது சிறந்த பேட்ஸ்மேன் சிறந்த பவுலர் விருதுகள் வழங்கப்படும் என நாமக்கல் மேற்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சரவண முருகன் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்